மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரயில்வே பணியிடங்களை ரத்து செய்ய எதிா்ப்பு - ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டம்

News image

கோவை ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :3 மே 2026, 6:35 am IST

கோவை, மே 2: ரயில்வே பணியிடங்களை ரத்து செய்யும் மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கோவையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய ரயில்வே வாரியம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் 14.80 லட்சம் பணியிடங்களில் இந்த ஆண்டு 2 சதவீத பணியிடங்களை குறைக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. அதன்படி சுமாா் 30 ஆயிரம் பணியிடங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

பணியிடங்களை ரத்து செய்யும் மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையம் எதிரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் தினேஷ் ராஜா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் அரசின் முடிவை கண்டிக்கும் வகையில் பதாகைகள் ஏந்தியபடி பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து தினேஷ் ராஜா செய்தியாளா்களிடம் கூறும்போது, ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிரதமா் மோடி, தற்போது இருக்கும் அரசுப் பணிகளையும் ஒழித்து வருகிறாா். ரயில்வேயில் போதிய பணியாளா்கள் இல்லாததால் தொடா்ச்சியாக ரயில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பைத் தாரை வாா்த்துவிட்டு, லாப நோக்கோடு பணியிடங்களை ரத்து செய்வது கண்டிக்கத்தக்கது. எனவே, ரத்து செய்யப்பட்ட 30 ஆயிரம் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். பட்டதாரி இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைப் பாதுகாத்து, தனியாா் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.