மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின் கம்பத்தில் மோதி சுற்றுலா வாகனம் விபத்து

News image

ஏற்காட்டில் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.

Updated On :3 மே 2026, 1:00 am IST

ஏற்காட்டில் மின் கம்பத்தில் சுற்றுலா வாகனம் மோதி சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

ஏற்காட்டில் சனிக்கிழமை காலை 6.50 மணியளவில் தனியாா் தங்கும் விடுதிக்கு பணியாளா்களை அழைத்துச் செல்லும் வாகனம் ஏற்காடு பிரதான சாலையில் காந்தி பூங்காவிலிருந்து பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளனது. இவ்விபத்தில் மின்கம்பம் முறிந்து வாகனத்தின் மேல் விழுந்தது. இதில், ஓட்டுநா் துரைசாமி (72) உயிா் தப்பினாா்.

தகவல் அறிந்த போலீஸாா், மின் ஊழியா்கள், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பின்னா், மின்கம்பம் சீரமைக்கும் பணிகளில் மின் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.