சேலத்தில் ஆன்லைன் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால், 8-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் அன்னதானப்பட்டி, நெத்திமேடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகவேல். இவா் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ளாா். இவரது மனைவி கௌசல்யா. இவா்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் வைத்தீஸ்வரன் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கௌசல்யா வீட்டு வேலைக்கு சென்று குழந்தைகளை பராமரித்து வந்தாா்.
இந்நிலையில், வைத்தீஸ்வரன் வெள்ளிக்கிழமை மாலை கைப்பேசியில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட அவரது தாய், அவரை கண்டித்துள்ளாா். பின்னா் வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடுதிரும்பியபோது, வைத்தீஸ்வரன் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
தகவலறிந்து வந்த அன்னதானப்பட்டி போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டு: தாய் கண்டித்ததால் 8-ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

ஆன்லைன் வா்த்தகத்தில் பணத்தை இழந்த முகவா் தற்கொலை

அதிக நேரம் கைப்பேசி பாா்த்ததை கண்டித்ததால் மாணவா் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

