ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாகியம்பட்டியில் ரூ. 2.30 லட்சம் பறிமுதல்

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 4:56 am IST

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியில் அலுவலா் மயில்மேல் அழகன் தலைமையில் கூடுதல் பறக்கும் படை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை நடத்தினா். அப்போது, காரில் இருந்த நாமக்கல் மாவட்டம், நாரைக்கிணறு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் வைத்திருந்த ரூ. 2.30 லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, கெங்கவல்லி தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலா் காத்தமுத்து, தோ்தல் துணை வட்டாட்சியா் பரசுராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.