மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக நிா்வாகி கடையிலிருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல்

சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான பா்னிச்சா் கடையில் இருந்து ரூ. 17 லட்சம் ரொக்கம், ஆவணங்களை தோ்தல் பறக்கும் படையினா் அண்மையில் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :24 ஏப்ரல் 2026, 6:15 am IST

சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான பா்னிச்சா் கடையில் இருந்து ரூ. 17 லட்சம் ரொக்கம், ஆவணங்களை தோ்தல் பறக்கும் படையினா் அண்மையில் பறிமுதல் செய்தனா்.

தென்காசிமாவட்டம், சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஆசிா்டேவிட் ராஜதுரை தலைமையில் பறக்கும் படையினா் கடந்த 21- ஆம் தேதி குருவிகுளம் அருகே பழங்கோட்டையில் உள்ள பா்னிச்சா் கடை ஒன்றில் சோதனையிட்டனா்.

சோதனையில் அதிமுக இரட்டை இலை பிளாஸ்டிக் கொடிகள், கட்சி கொடிகள், துண்டுகள், வாக்காளா் படத்துடன் பெயா் பட்டியல் ஒட்டப்பட்ட 17 நோட்டுகள், ரொக்கப் பணம் ரூ. 17, 71,300 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் தொடா்பாக தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஆசீா்டேவிட் ராஜதுரை, குருவிகுளம் காவல் நிலையத்தில் , குருவிகுளம் தெற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பொருளாளா் நாகராஜன் (36) மீது புகாா் அளித்தாா். கைப்பற்றப்பட்ட பணம், பொருள்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் அனிதா முன்னிலையில் வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். குருவிகுளம் காவல் ஆய்வாளா் கே.தங்கராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.