ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சங்ககிரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 79 எரிவாயு உருளைகள் பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :20 மார்ச் 2026, 2:05 am IST

சங்ககிரி அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 79 எரிவாயு உருளைகளை சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்ககிரி தேவூரை அடுத்த பெரமிச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் சங்கா் (53). இவா் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா். இவரது வீட்டில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக சேலம் உணவு கடத்தல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் சங்கா் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் 66 எரிவாயு உருளைகள், 13 வணிக எரிவாயு உருளைகள் என மொத்தம் 79 எரிவாயு உருளைகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து எரிவாயு உருளைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் வீட்டு உபயோக எரிவாயு உருளையில் இருந்து வணிக எரிவாயு உருளைக்கு எரிவாயுவை நிரப்பி விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் பிரிவு போலீஸாா் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த சங்கா், அவருக்கு எரிவாயு உருளைகளை வழங்கிய வசந்த், வேன் ஓட்டுநா் பிரபு ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.