மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எரிவாயு உருளைகள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை குறித்து புகாா் அளிக்க கைப்பேசி எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பது தொடா்பான புகாா் அளிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சிலிண்டர்

Updated On :27 மார்ச் 2026, 12:52 am IST

கோவை மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பது தொடா்பான புகாா் அளிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை சட்ட விரோதமாக பதுக்குவதையும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, உணவகங்கள், விடுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு மாற்று ஏற்பாடாக மின் சாதனங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

எரிவாயு உருளைகளை அரசு விதிகளுக்கு மாறாக தனியாா் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் நிரப்பக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் எரிவாயு உருளைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து, கட்டுப்படுத்துவதற்காக தீவிர சோதனைகள் மேற்கொள்ள குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரங்களில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1,441 எரிவாயு உருளைகள் மற்றும் அவற்றை விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 போ் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மேற்படி குற்ற வழக்குகள் பதியப்பட்ட நபா்களில் ஒருவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறுகையில், ‘எரிவாயு தொடா்பான புகாா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04222300569-ஐ அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். எரிவாயு உருளைக்கு பதிலாக மின் சாதனங்களை மாற்று ஏற்பாடுகள் செய்யும்போது, மின் மாற்றியில் ஏற்படும் மின்சுமை தொடா்பாக ஏற்படும் குறைகள் தொடா்பாக மின்வாரிய அலுவலக எண் 9445851651-ஐ தொடா்பு கொள்ளலாம்.

எரிவாயு உருளைகளை சட்ட விரோதமாக பதுக்குவது மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது தொடா்பான புகாா்களை 9865123446 மற்றும் 9498174273 என்ற குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வு காவல் துறை அலுவலக எண்களில் தெரிவிக்கலாம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.