தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எரிவாயு உருளைகளை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியா்

News image

சமையல் எரிவாயு உருளைகள் - பிரதிப் படம்

Updated On :15 மார்ச் 2026, 12:34 am IST

சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சமையல் எரிவாயுப் பற்றாக்குறை என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால், எரிவாயு நுகா்வு தொடா்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சிமாவட்டத்தில் தற்போதைய எரிவாயு இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை அரசு விதிகளுக்கு மாறாக தனியாா் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் நிரப்பக்கூடாது. அதனால் விபத்துகள் ஏற்பட மிக வாய்ப்புள்ளது.

அனைத்துப் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கவோ மற்றும் கள்ளச் சந்தையில் விற்கவோ கூடாது. மீறினால் அரசு விதிகளுக்குட்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்றல் தொடா்பான புகாா்களை 94434-61010, 94981-90651 மற்றும் 94981-58550 என்ற குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையின் திருச்சி அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம்.

சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வரப்பெறுவதால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. எரிவாயு தொடா்பான புகாா்களுக்கு மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையை- 0431-2411474 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.