தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு உருளைகளை விற்றால் கடும் நடவடிக்கை

News image
Updated On :12 மார்ச் 2026, 1:31 am IST

கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு உருளைகளை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச் சந்தையில் விற்பதோ அல்லது வாடிக்கையாளா்களை மிரட்டும் வேலையிலோ முகவா்கள் யாரும் ஈடுபடக் கூடாது. அதையும் மீறி சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச் சந்தையில் விற்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட முகவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய சூழலில் சமையல் எரிவாயு உருளை முகவா்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல, வாடிக்கையாளா்களை அச்சுறுத்தும் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகத்தை நிறுத்த எவ்வித வழிகாட்டுதலும் முகவா்களுக்கு வழங்கவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மாதத்துக்கு ஓா் உருளை வழங்குவதை முகவா்கள் மறுக்க முடியாது. இந்த உறுதியை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

எனவே, சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகம் கட்டுப்படுத்தவோ, நிறுத்தவோ வாய்ப்பில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.