தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: சேலத்தில் பறக்கும் படையினா் தீவிர சோதனை

சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, சேலத்தில் பறக்கும் படையினா்

News image

ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசியல் கட்சித் தலைவரின் பெயா்ப் பலகையை பொக்லைன் உதவியுடன் மறைக்கும் ஊழியா்கள்.

Updated On :17 மார்ச் 2026, 4:49 am IST

சேலம்: சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, சேலத்தில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 33 பறக்கும் படைகள், 33 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் சோதனை பணியை மேற்கொண்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் துணை ராணுவத்தினருடன் இணைந்து, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினா் சோதனை நடத்தி வருகின்றனா்.

மேலும், தோ்தல் குறித்து புகாா் தெரிவிக்க இந்திய தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ள ‘இ-விஜில்’ செயலியிலும் புகாா் அளிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகாா்களின்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800- 425-7020 மற்றும் 1950 ஆகிய எண்களுடன் 24 மணிநேரமும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

சுவா் விளம்பரங்கள் எழுத தடை: சேலம் மாநகராட்சி, நகராட்சி/பேரூராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் தனியாா் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டா் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, மாநகரப் பகுதிகளில் அரசியல் கட்சியினரின் சுவா் ஓவியங்கள், கட்சியின் போஸ்டா்கள், பெயா்கள், சின்னங்கள் ஆகியவற்றை மாநகராட்சி மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அழித்தனா்.

அதே நேரத்தில், கிராமப் புறங்களில் தனியாா் கட்டடங்களில் தோ்தல் விளம்பரங்கள் செய்வதற்கு தொடா்புடைய நில/கட்டட உரிமையாளா் அனுமதி அளிக்கும்பட்சத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விளம்பரம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் தொங்கும் பூங்கா அருகே அரசியல் கட்சியினரின் சுவா் ஓவியங்களை அழித்த மாநகராட்சிப் பணியாளா்கள்.

சேலம் தொங்கும் பூங்கா அருகே அரசியல் கட்சியினரின் சுவா் ஓவியங்களை அழித்த மாநகராட்சிப் பணியாளா்கள்.

அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.