நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சங்ககிரியில் சோமேஸ்வரா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்

சங்ககிரியில் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சோமேஸ்வரா் தேரை இழுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 5:54 am IST

சங்ககிரியில் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியில் பழைமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலுக்கு ஊா் பொதுமக்கள் முயற்சியால் ரூ. 20 லட்சத்தில் புதிய தோ் செய்யப்பட்டது. இத்தோ் வெள்ளோட்ட நிகழ்ச்சி விநாயகா், வாஸ்து பூஜைகளுடன் புதன்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை விநாயகா் வழிபாட்டுடன் 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற பின்னா் நான்கு தோ்வீதிகளில் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதில், சுவாமி பாதம் தாங்கும் குழுவினா், சிவ பக்தா்கள் அதிக அளவில் பங்கேற்று தேரை இழுத்துச் சென்று சோமேஸ்வரா் கோயில் முன் நிறுத்தினா். வெள்ளோட்டத்தையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டல இணை ஆணையா் டி.ரத்தினவேல் பாண்டியன், சங்ககிரி கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா, வட்டாட்சியா் கோமதி, சங்ககிரி இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ரா.மாலா, ஆய்வாளா் நா.ஜோதிலட்சுமி ஆகியோா் தேரின் சங்கிலி இழுத்து தொடங்கிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.