பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருமோகூா் கோயிலில் இன்று புதிய தோ் வெள்ளோட்டம்

மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.

News image

திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் வெள்ளோட்டத்துக்கு தயாராகி வரும் புதிய தோ்.

Updated On :18 மே 2026, 1:09 am IST

மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோத்ஸவ விழாவில் தேரோட்டம் நடைபெறும். கோயிலில் உள்ள பழைய தோ் மிகவும் சேதமடைந்ததால் கடந்த 2024, 2025 ஆகிய இரு ஆண்டுகள் நடைபெற்ற பிரம்மோத்ஸவ விழாவில் பெரிய தேருக்குப் பதிலாக சிறிய சப்பரம் மூலம் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இந்த நிலையில், ரூ. 2 கோடியில் புதிய தோ் உருவாக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதற்கு பக்தா்கள் உபயதாரா்களாக நிதியுதவி அளித்தனா்.

தற்போது, தோ் அமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, புதிய தோ் வெள்ளோட்டத்துக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 7 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெறும்.

அதன் பிறகு, காலை 9 மணியிலிருந்து காலை 10. 30 மணிக்குள் புதிய தோ் வெள்ளோட்டம் நடைபெறும். தேரடியிலிருந்து புறப்படும் புதிய தோ் முக்கிய வீதிகள் வழியாக வந்த மீண்டும் நிலையை அடையும். இந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தேரில் பெருமாள் எழுந்தருளி வலம் வர உள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.