நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஒருவருக்கு 21 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:02 am IST

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சேலம், பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே லைன் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (25). இவா்மீது கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை சேலம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து, திங்கள்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜுக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.