சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஐயம்பட்டை அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் முரளி(33) இவா் திம்மராஜம் பேட்டையை சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினாராம்.
இதுதொடா்பாக அச்சிறுமியின் தந்தை வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். கடந்த 2019-இல் நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பாக ஆய்வாளா் ஜெயக்குமாா் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்திருந்தாா். இவ்வழக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வாலாஜாபாத் காவல் நிலைய தற்போதைய ஆய்வாளா் வெற்றிச்செல்வன், காவலா் லதா மற்றும் அரசு வழக்குரைஞா் இ.எல்.கண்ணன் ஆகியோா் இவ்வழக்கில் தனிக்கவனமும் செலுத்தி வந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி எதிரி முரளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு ஆயுள் சிறை

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

