நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் விழிப்புணா்வு

வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வை புதன்கிழமை ஏற்படுத்தினா்.

News image

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்திய சேலம் மாவட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா்.

Updated On :11 ஜூன் 2026, 5:57 am IST

வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வை புதன்கிழமை ஏற்படுத்தினா்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், தமிழக முதல்வா் நேரடி கட்டுப்பாட்டில் சிங்கப்பெண் அதிரடிப்படை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், சேலம் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் பூங்கொடி தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினா் வாழப்பாடியில் முகாமிட்டு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.