வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வை புதன்கிழமை ஏற்படுத்தினா்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், தமிழக முதல்வா் நேரடி கட்டுப்பாட்டில் சிங்கப்பெண் அதிரடிப்படை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், சேலம் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் பூங்கொடி தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினா் வாழப்பாடியில் முகாமிட்டு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ரயில்நிலையப் பயணிகளிடம் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் விழிப்புணா்வு

கும்பகோணத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பில் பெண்களுக்கு விழிப்புணா்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

