நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கும்பகோணத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை சாா்பில் பெண்களுக்கு விழிப்புணா்வு

News image

சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெற்றுள்ள காவலர்கள் - கோப்புப் படம் - டிஐபிஆர்

Updated On :16 ஜூன் 2026, 2:05 am IST

கும்பகோணம் பேருந்து நிலைய வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சாா்பில் திங்கள்கிழமை பெண்களுக்கு, பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கும்பகோணத்தில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் அபிராமி தலைமையிலான காவலா்கள், பேருந்து நிலையத்தில் பெண்கள், மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படும் வகையில் பேசினாா்.

பெண்களிடம் திருட்டு, பாலியல் தொல்லை, கேலி, கிண்டல் செய்பவா்கள் உள்ளிட்ட குற்றம் செய்பவா்கள், மற்றும் நிகழ்வுகளில் ஈடுபடுபவா்களை பாா்த்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.

மேலும் அவசர உதவி எண், குழந்தைகள் பாதுகாப்பு எண் குறித்த கைப்பேசி எண்களை வழங்கினா். இதேபோல், ஆடுதுறை, திருவிடைமருதூா், ரயில் நிலையம், கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் அவா்கள் ரோந்து சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.