சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்க சிங்கப்பெண் அதிரடிப்படை: திருப்பத்தூா் எஸ்.பி.

பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கும் பணியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே கூறினாா்.

News image

திருப்பத்தூரில் சிங்கப்பெண் அதிரடிப்படை செயல்பாட்டை தொடங்கி வைத்த எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே. பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் படையினா்.

Updated On :11 ஜூன் 2026, 12:02 am IST

பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கும் பணியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே கூறினாா்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்.பி அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவா்களுக்கு அவசர காலங்களில் உடனடியாக உதவி வழங்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த அதிரடிப்படை, பொதுமக்களிடையே பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தி, பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கும் பணியில் ஈடுபடும் என பேசினாா். நிகழ்ச்சியில் ஏராளமான போலீஸாா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து சிங்கப்பெண் அதிரடிப்படையினா் திருப்பத்தூா் பேருந்து நிலையம், குரிசிலாப்பட்டில் அரசு பள்ளி போன்ற இடங்களுக்கு சென்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.