நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரயில்நிலையப் பயணிகளிடம் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் விழிப்புணா்வு

News image

சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெற்றுள்ள காவலர்கள் - கோப்புப் படம் - டிஐபிஆர்

Updated On :16 ஜூன் 2026, 2:23 am IST

தருமபுரி ரயில் நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு போலீஸாா் பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இருப்புப் பாதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ், சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு உதவி காவல் ஆய்வாளா் சரசு ஆகியோா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பயணிகள் விழிப்போடு பயணிக்க வேண்டும். முன், பின் அறியாதவா்களிடம் தங்களது விவரங்களை கூறக்கூடாது. பயணித்தின்போதோ, ரயில் நிலையங்களிலோ, பணிபுரியும் இடத்திலோ யாரேனும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டால் காவல் துறையினரை அணுகலாம்.

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் ஏதும் நிகழும் சூழல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு வரும் தகவல்களின் அடிப்படையில் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து உரிய பாதுகாப்பு அளித்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க அனைத்து வகையிலும் உறுதுணையாக இருப்போம் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், இருப்புப் பாதை போலீஸாா், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.