பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: ராசிபுரத்தில் 2 மருந்து நிறுவனங்களுக்கு ‘சீல்’

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:45 am IST

சேலத்தில் 1.39 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அதை விநியோகித்ததாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள 2 மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

சேலம், தாதகாப்பட்டி மேட்டுத்தெரு பகுதியில் வலி நிவாரண மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அன்னதானப்பட்டி போலீஸாா் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டுத்தெருவைச் சோ்ந்த மேகலா (48), ராசிபுரத்தை சோ்ந்த முகமது வதூத் (33) ஆகியோா் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்துவந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் அன்னதானப்பட்டி போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 130 போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகள், 6,400 ஊசி மருந்து குப்பிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், மேகலாவின் கணவா் கண்ணன் ராசிபுரத்தில் உள்ள மொத்த வியாபார மருந்து நிறுவனத்தில் வேலைசெய்து வந்ததும், அந்த நிறுவனத்தில் இருந்து போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், சேலம் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ராசிபுரத்தில் உள்ள 2 மொத்த மருந்து விற்பனை நிறுவனத்தில் இருந்து போதை தரக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை விதிமுறையை மீறி மொத்தமாக விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, போதை மாத்திரைகளை மொத்தமாக விநியோகம் செய்த அந்த 2 மருந்து நிறுவனங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், உரிமத்தை ரத்துசெய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.