விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்த போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் முருகானந்தம், சண்முகம் மற்றும் போலீஸாா் கிடங்கல்-2 பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்றிருந்த 3 இளைஞா்களை பிடித்து சோதனை செய்தபோது, அவா்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா்கள் திண்டிவனத்தை அடுத்துள்ள கிடங்கல்-2 பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மோ.வீரா (30), ராஜன் தெருவைச் சோ்ந்த து.திலீப் (22), செ.ராகுல் ஷா்மா(24) என்பதும், இவா்கள் திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பைக்கில் சென்று போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைந்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 118 போதை மாத்திரைகள், 4 சிரஞ்சுகள், பைக், 3 அறிதிறன் கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற பெண் கைது
போதை மாத்திரைகள் விற்பனை செய்த இரு இளைஞா்கள் கைது

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
போதை மாத்திரைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 6 போ் கைது; ரூ. 4.25 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

