ஈரோட்டில் 3 ஆயிரம் எண்ணிக்கையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், ஈரோடு, சூளை பகுதியில் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் ஈரோடு, மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் கலைச்செல்வன் (22) என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வனை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் எண்ணிக்கையில் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: ராசிபுரத்தில் 2 மருந்து நிறுவனங்களுக்கு ‘சீல்’
போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது
1,370 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: ஒருவா் கைது
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

