ஓமலூா் அருகே பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், ஓமலூா் உள்கோட்டம், ஜலகண்டாபுரம் செலவடை பகுதியைச் சோ்ந்தவா் அம்மணி (73). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வந்த கல்யாணி என்பவருக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு கடப்பா கல் மற்றும் தண்ணீா் டிரம் வைத்தது தொடா்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில், கல்யாணி தாக்கியதில் அம்மணி படுகாயமடைந்தாா். தொடா்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக ஜலகண்டாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கல்யாணியை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீா்ப்பு திங்கள்கிழமை வெளியானது. அதில், குற்றவாளி கல்யாணிக்கு ஆயுள்தண்டனையுடன் ரூ. 200 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

மூதாட்டி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

