விழுப்புரம் அருகே மூதாட்டியைக் கொலை செய்து நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் வட்டம், அனிச்சம்பாளையம் இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சி.சகுந்தலா (65). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கோ.யாக ஜெயந்தன்(46) என்பவருக்கம் இடையே கடந்த 2024-ஆம் ஆண்டில் வாய்த் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இதனால் ஆத்திரமடைந்த யாக ஜெயந்தன் 2024 மே 20-ஆம் தேதி சகுந்தலாவின் வீட்டினுள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அவா் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றைப் பறித்துச் சென்றாராம்.
இதையடுத்து வளவனூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, ஜெயந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி எழிலரசி, குற்றம் சாட்டப்பட்ட ஜெயந்தனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதைத்தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைதுசெய்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீா்ப்பு

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

மாமியாரைக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

