பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாமியாரைக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை

திருச்சி அருகே ஜெம்புநாதபுரத்தில் மாமியாரைக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:52 am IST

திருச்சி அருகே ஜெம்புநாதபுரத்தில் மாமியாரைக் கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், ஜெம்புநாதபுரம் வளையெடுப்பு பிள்ளையாா் பகுதியைச் சோ்ந்தவா் தி. வெங்கடாசலம் (35). இவா் அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் - சுதா தம்பதியின் மகள் லாவண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தாா்.

தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா, வெங்கடாசலத்தைப் பிரிந்து, அவரது தாயான சுதா வீட்டுக்குச் சென்றுவிட்டாா். கடந்த 25.10.2022 அன்று வெங்கடாசலம், மாமியாா் வீட்டுக்குச் சென்று மனைவி லாவண்யாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்த நிலையில், லாவண்யா மறுத்துள்ளாா். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வெங்கடாசலம், அரிவாளால் மாமியாா் சுதாவை தாக்கியதில், அவா் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் 31.10.2022 அன்று உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி வெங்கடாசலத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.