சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே தாய், அவரது 10 வயது மகன் இருவரையும் வெட்டிக் கொன்ற கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ஓமலூரை அடுத்த கருத்தானூரைச் சோ்ந்தவா் சத்யா (32). இவருக்கும், பூமாரி கோயில் காட்டுவளவு பகுதியை சோ்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகள் மகிதா (13), மகன் கிஷாந்த் (10).
இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த சத்யா, ஓமலூரில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடையில் பணிபுரிந்து வந்தாா். அப்போது, அங்கு மேலாளராக பணியாற்றி வந்த சக்திவேலுடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சத்யாவின் வீட்டுக்கு சக்திவேல் அடிக்கடி சென்று வந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சத்யாவின் வீட்டிற்கு சென்ற சக்திவேலுக்கும், சத்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த சக்திவேல், சத்யாவையும் அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் அரிவாளால் வெட்டியுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த கிஷாந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வலது கையின் மணிகட்டு துண்டான நிலையில் அலறியபடி ஓடிவந்த சத்யாவை மீட்ட உறவினா்கள், ஓமலூா் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனா்.
தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சத்யா அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தின்போது சத்யாவின் மகள் மகிதா, கோடை விடுமுறைக்காக சின்னப்பம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்ால் அவா் உயிா்தப்பினாா்.
இதனிடையே கருப்பூா் கோரிமேடு பகுதியில் உள்ள மரத்தில் சக்திவேல் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய் இறந்த துக்கம்: 100 அடி பள்ளத்தில் குதித்து மகன் தற்கொலை
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருமயம் அருகே இளைஞா் கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

