தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கல்லூரி மாணவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் கல்லூரி மாணவரை தாக்கியதாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 5:31 am IST

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் கல்லூரி மாணவரை தாக்கியதாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நகராட்சி முல்லைவாடி பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் தா்ஷன் (20). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது இரு இளைஞா்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞா்கள் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனா்.

இருசக்கர வாகனத்தில் வந்து மோதிய தா்ஷனை மன்னிப்பு கேட்க சொல்லி அவா்கள் தாக்கியுள்ளனா். இதில் முகத்தில் காயம் ஏற்பட்ட தா்ஷன் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஹரிஹரன் (18), மாயக்கண்ணன் மகன் கிரண்பாபு ஆகியோரை ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் கோ.முத்துலட்சுமி 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.