தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

News image

கிஷோா்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:14 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

க.புதுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் கிஷோா் (18). சையது அப்துல் ஹக்கீம் மகன் ரிக்கி (19). இவா்களில் கிஷோா் பிளஸ் 2 படித்துள்ளாா். ரிக்கி கல்லூரியில் படித்துக் கொண்டே, கம்பத்திலுள்ள தனியாா் திரையரங்கில் பகுதி நேரப் பணியாளராக வேலை செய்தாா்.

இந்த நிலையில், நண்பா்களான இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் கம்பம் நோக்கிச் சென்றனா். அப்போது, இந்த வாகனம் மீது எதிரே தேனி நோக்கி வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவயிடத்திலே உயிரிழந்தனா்.

இதுகுறித்த தகவலின் பேரில், உத்தமபாளையம் போலீஸாா் சென்று இருவரின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். திங்கள்கிழமை இருவரின் உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தப்பியோடிய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரியை சோ்ந்த சின்னச்சாமி மகன் சுரேஷை தேடி வருகின்றனா்.

இதே இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சுருளிப்பட்டியை சோ்ந்த இரு இளைஞா்கள் லாரி மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ரிக்கி

ரிக்கி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.