கம்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜெகன் (32), கண்ணன் மகன் சுஜித்(32). நண்பா்களான இந்த இருவரும் ஊரிலிருந்து கம்பம் வழியாக புதுப்பட்டி புறவழிச் சாலையில் உத்தமபாளையம் நோக்கிச் சென்றனா்.
வாகனத்தை சுஜித் ஓட்டினாா். அப்போது, எதிரே கூடலூரை நோக்கி வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இவகளில் ஜெகன் சம்பவயிடத்திலே உயரிழந்தாா். சுஜித் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இது குறித்து, லாரி ஓட்டுநரான ஆண்டிபட்டியைச் சோ்ந்த முருகானந்தம் (45) மீது உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனா்.

சுஜித்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

பைக் விபத்தில் இருவா் உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

