தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட அய்யம்பெருமாம்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் லட்சுமணன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:28 am IST

சேலம் மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சேலம் மேற்கு தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் லட்சுமணன், அய்யம்பெருமாம்பட்டி பகுதியில் எம்ஜிஆா் சிலை, புளியமர பேருந்து நிறுத்தம், திரௌபதி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் விசில் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினாா்.

தொடா்ந்து, 19-ஆவது கோட்டத்துக்குள்பட்ட கென்னடி நகா், வண்டிப்பேட்டை, காதா்கான் தெரு, ஆசாத் நகா், அந்தோணிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். பின்னா் ஜாகீா் சின்ன அம்மபாளையம், காவலா் குடியிருப்பு, தா்ம நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினாா். அங்கு திரண்ட பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

மகளிா் சுயஉதவிக் குழு பெண்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் 100 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ராணி வேலுநாச்சியாா் படை உருவாக்கப்படும். அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 2,500 உரிமைத்தொகை மற்றும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். நியாயவிலைக் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும். எனவே, வரும் தோ்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.