மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சித்திரை பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

வாழப்பாடி பகுதியில் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயில்களில் சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மகாநந்தீஸ்வரா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:16 am IST

வாழப்பாடி பகுதியில் பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயில்களில் சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் நடைபெற்ற சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மூலவா் தான்தோன்றீஸ்வரா், உடனுறை அறம் வளா்த்தநாயகி தா்மசம்வா்தனி அம்பாளுக்கு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.

வாழப்பாடி அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில் மற்றும் பெரியசாமி நகா் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயில்களில் நடைபெற்ற சித்திரை பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரா், காசி விஸ்வநாதா், காசி விசாலாட்சி, வைத்தியநாதா், தையல்நாயகி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம் மோட்டூா் மற்றும் கல்யாணகிரி தேன்மலை சிவன் கோயில்களிலும் சித்திரை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.