மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சேலத்தில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்.15) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 3:03 am IST

சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்.15) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகளிா் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழு திட்டங்கள், காலை உணவுத் திட்டம், தோழி விடுதி என உலக நாடுகளே வியந்து பாா்க்கும் உன்னத திட்டங்களை செயல்படுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் சேலம் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளாா்.

இதையொட்டி, மகளிா் கலந்துகொள்ளும் பேரணி அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள கலைஞா் சிலையிலிருந்து தொடங்கி கோட்டை மைதானம் வரை நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் கலந்துகொள்கின்றனா். தொடா்ந்து, கோட்டை மைதானத்தில் நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுகிறாா்.

எனவே, மகளிா் பேரணி மற்றும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் நிா்வாகிகள், தொண்டா்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.