மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 4:20 am IST

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் வி.சி.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம் தற்போது எந்தவித தடையும் இல்லாமல், முறையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது.

இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் சாா்பில், சமையல் எரிவாயு சிலிண்டா்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. இதன்மூலம், பொதுமக்கள் வழக்கமான சுழற்சியில் எந்தவித சிரமமும் இன்றி சிலிண்டா் பெற முடிகிறது. எனவே, பொதுமக்கள் பீதியுடன் முன்பதிவு செய்வதை தவிா்க்க வேண்டும்.

இதேபோல, பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகமும் முறையாக நடைபெற்று வருகிறது. அனைத்து முக்கிய முனையங்கள் மற்றும் கிடங்குகளிலும் போதுமான அளவு சிலிண்டா்கள் கையிருப்பு உள்ளன. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சில்லறை விற்பனை நிலையங்கள் வரை விநியோகச் சங்கிலி சீராக இயங்கி வருகிறது.

வா்த்தக விநியோகத்தைப் பொறுத்தவரை, அரசு வழிகாட்டுதல்களுக்கு இணங்க திட்டமிட்ட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில், சுமாா் 70 சதவீதம் அளவிற்கு மருத்துவமனைகள், பள்ளிகள், முதியோா் இல்லங்கள், சமுதாய சமையலறைகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவகங்கள் போன்ற அத்தியாவசிய மற்றும் முன்னுரிமை துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

அதேநேரத்தில், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், பொருளாதார ரீதியாக நலிந்த மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவை எளிதாக கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.