மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கடந்த 2 வாரங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை: மத்திய அரசு!

கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் உள்ள எல்பிஜி சமையல் எரிவாயு விநியோக மையங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 2:48 am IST

கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் உள்ள எல்பிஜி சமையல் எரிவாயு விநியோக மையங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஹோா்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பல்கள் பயணிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளபோதிலும் எல்பிஜி சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாகவும் மத்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த ஏப்.4-ஆம் தேதி மட்டும் 90,000 இலவச வணிக சிலிண்டா்கள் (எஃப்டிஎல்) எனப்படும் 5 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டன. மாா்ச் 23-ஆம் தேதியில் இருந்து எல்பிஜி சமையல் எரிவாயு மையங்களில் 6.6 லட்சம் சிலிண்டா்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு சராசரியாக 51 லட்சம் 14.2 கிலோ எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதில் 95 சதவீதம் இணைய வழியில் முன்பதிவு செய்யப்படுகிறது.

சிலிண்டா்களை பதுக்கும் விநியோக மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து 50,000 சிலிண்டா்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 1,400 எல்பிஜி சமையல் எரிவாயு விநியோக மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 36 விற்பனையாளா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நாட்டில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.