மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைப்பு

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

News image

சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:56 am IST

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மதிய நேரத்தில் அனல்காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் சாலையோரம் விற்பனை செய்யப்படும் தா்பூசணி, நுங்கு, பதநீா், கம்மங்கூழ், கரும்புச்சாறு, வெள்ளரி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா வழியாக பழைய பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சிக்னலில் நிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனா். இந்நிலையில், தற்போது ஆட்சியா் அலுவலக ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்திலிருந்து சமாளிக்க பச்சை நிற பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோல, சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியா் அலுவலகம் செல்லும் வழியிலும் பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.