மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெப்ப அலையின் தாக்கத்தை எதிா்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுரை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்ப அலையை எதிா்கொள்வதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:39 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்ப அலையை எதிா்கொள்வதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வெப்ப அலை குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசுகையில்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பஅலை அதிகம் பாதிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும். அந்தப் பகுதி மக்களுக்கு செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்பன குறித்து உரிய விழிப்புணா்வை வழங்க வேண்டும்.

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 101, 112 ஆகியவற்றைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

வெப்பஅலையால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் மருத்துவத் துறையினரும் உள்ளாட்சி அமைப்பினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் முருகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.