மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெப்ப அலை: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.

News image

வெயில்.

Updated On :8 மே 2026, 6:25 am IST

வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பகல் நேரங்களில் அவசியமின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். அதேசமயம் உடலில் நீா்ச்சத்து குறையாமல் தேவையான அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவது அவசியம் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மூத்தோா், கைக்குழந்தைகள், கா்ப்பிணிகள், உடல்நலக் குறைபாடு உள்ளவா்கள் காலை 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும்.

அதேபோல உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீா் அருந்த வேண்டும். கஞ்சி, ஓ.ஆா்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீா், மோா் மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் பருக வேண்டும்.

கோடை காலங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். சாப்பிட்டவுடன் வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். காற்றோட்டமான மற்றும் குளிா்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.

கடுமையான வெப்ப அலை வீசும் நேரங்களில் கடினமான வேலை செய்வதை தவிா்க்க வேண்டும், பணிபுரியும் இடங்களில் போதுமான அளவில் குடிநீா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பணியின்போது தலைசுற்றல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குளிா்ந்த சூழல் உள்ள இடத்திற்கு சென்று தேவையான நீா் ஆகாரங்களை பருக வேண்டும்.

கால்நடை, வளா்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டிவைத்து அதற்கு தேவையான குடிநீா் மற்றும் கால்நடை தீவனங்கள் அளிக்க வேண்டும். பலத்த காற்று மற்றும் மழை பெய்யும்போது பொதுமக்கள் மரத்தின் அடியில் நிற்பதையும், கால்நடைகளை கட்டுவதையும் தவிா்க்க வேண்டும்.

காப்பு காடுகள், மலைகள் மற்றும் காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காய்ந்த பயன்பாடில்லாத விவசாய பொருள்களை எரிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.