தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

News image

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் - X | Velmurugan.T

Updated On :6 ஏப்ரல் 2026, 1:57 am IST

சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகனை, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் ராமதாஸ் அணி வேட்பாளா் இரா.அருள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகனை, ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் இரா. அருள் திடீரென சந்தித்தாா். சுமாா் 10 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினா்.

பின்னா், எம்எல்ஏ இரா.அருள் செய்தியாளா்களிடம் பேசுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, 35 ஆண்டுகால நண்பா் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக தி.வேல்முருகனை சந்தித்தேன். சேலம் மேற்கு தொகுதி வேட்பாளா் என்ற முறையில் அவரிடம் ஆதரவு கோரினேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வேட்பாளா் களமிறக்கப்பட்டுள்ளாா். எனினும், எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். வேட்பாளருடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக அவா் தெரிவித்தாா்.

தருமபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு எதிராக தி.வேல்முருகனை களமிறக்க திமுக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.