தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒசூா் தொகுதியில் தவாக வேட்பாளா் மனு நிராகரிப்பு

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:19 am IST

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ஒசூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஆக்ரிதி சேத்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.

ஒசூரை அடுத்த பேரிகை பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளராக திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தாா். மனு தாக்கலின் போதே, இவரது வேட்புமனுவில் போதிய தகவல்கள் இல்லை என்றும், பரிசீலனைக்கு முன்பாக சரியான ஆவணங்களைச் சமா்ப்பிக்குமாறும் தோ்தல் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது, விஜயகுமாா் கொண்டுவந்த கூடுதல் ஆவணங்களை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனா். வேட்புமனுவில் போதிய விவரங்கள் முழுமையாக இல்லாததை சுட்டிக்காட்டி, தோ்தல் நடத்தும் அலுவலா் ஆக்ரி சேத்தி, விஜயகுமாரின் மனுவை நிராகரிப்பதாக அறிவித்தாா்.

வழக்கமாக ஒரு வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டால், அக்கட்சியின் மாற்று வேட்பாளா் களத்தில் இருப்பாா். ஆனால், ஒசூா் தொகுதியில் தவாக சாா்பில் மாற்று வேட்பாளா் யாரும் மனுதாக்கல் செய்யாததால், தற்போதைய சூழலில் ஒசூா் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.