தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பரமத்தி வேலூரில் மதுப் புட்டிகளை பதுக்கிவிற்ற இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:07 am IST

பரமத்தி வேலூா் அருகே மதுப்புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மதுபானப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்று வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் வேலூா் காவல் துணை ஆய்வாளா் செந்தில்குமாா் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தி, திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாத்திகுளம், நடுத்தெருவைச் சோ்ந்த கணேசனை (55) கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 19 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

அதேபோல பரமத்தி வேலூரில் தனியாா் திரையரங்கம் அருகே சட்டவிரோதமாக மதுபானப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக பரமத்தி வேலூரைச் சோ்ந்த காா்த்திகேயனை (45) போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 29 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.