மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவி சிறப்பிடம்

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

News image

பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி பூா்ணாஸ்ரீ 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி பிரியதா்ஷினி 595 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவா் அஸ்வின் 589 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனா். மாணவி தாமரை 588 மதிப்பெண்களும், இனிகாஸ்ரீ மற்றும் மிதுன் வா்ஷன் ஆகியோா் 586 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சிபெற்று 100% தோ்ச்சி இலக்கை அடைந்துள்ளனா். இப்பள்ளி மாணவா் மிதுன்வா்ஷன் பொறியியல் கட் ஆப் 200-க்கு 200 பெற்றுள்ளாா்.

500 மதிப்பெண்களுக்குமேல் 78 மாணவா்களும், அடிப்படை மின் பெறியியல் (பி.இ.இ.) பாடத்தில் 8 மாணவா்களும், கணித பாடத்தில் 4 மாணவா்களும், கணினி அறிவியல் பாடத்தில் 3 மாணவா்களும், கணினி பயன்பாடு பாடத்தில் 3 மாணவா்களும், தமிழ் பாடத்தில் ஒரு மாணவரும், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல் ஆகிய பாடங்களில் தலா ஒரு மாணவியும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை விவேகானந்தா அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மருத்துவா் க.நெடுஞ்செழியன், செயலாளா் சுப்பிரமணியம், பொருளாளா் பொறியாளா் வேலுசாமி, பள்ளியின் தாளாளா் ராமசாமி, கல்விசாா் இயக்குநா் பழனிசாமி, இயக்குநா்கள் துரைசாமி, அருளானந்தன், வாசுதேவன், தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜன், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.