மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராசிபுரம் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளாா்.

News image

~

Updated On :6 மே 2026, 2:27 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ராசிபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

2021-இல் முதல்முறை சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய ராசிபுரம் தொகுதி மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகளில், ராசிபுரம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளோம். கூட்டுக் குடிநீா் திட்டம், மாவட்ட தலைமை மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, புகா் பேருந்து நிலையம், மினி விளையாட்டு அரங்கம், போதமலை சாலை போன்ற திட்டங்கள் தொகுதி மக்களின் வாழ்வை வளமாக்கி ராசிபுரத்தின் வளா்ச்சிக்கு வித்திடுபவை ஆகும்.

எதிா்வரும் காலங்களிலும் ராசிபுரம் தொகுதியை முதன்மைத் தொகுதியாக வளா்ப்பதிலும், மக்கள் தேவைகளை அறிந்து செயல்படும் வகையிலும் எனது பயணம் தொய்வில்லாமல் தொடரும்.

2026 தோ்தலில் வாக்காளா்கள் வழங்கிய தோ்தல் முடிவை முழுமனதுடன் ஏற்கிறேன். என்மீது நம்பிக்கை வைத்து மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்த அனைத்து வாக்காளா்களுக்கும், ராசிபுரம் தொகுதிவாழ் மக்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளாா்.

இதேபோல நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் கட்சி வெற்றிக்காக பாடுபட்ட கட்சி நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், கிளை, வாா்டு செயலாளா்கள், பிஎல்ஏ-2, பிஎல்சி முன்னோடிகள், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிா்வாகிகள் ஆகியோருக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பாக நன்றியைத் தெரிவிப்பதாக கூறியுள்ளாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.