பரமத்தி வேலூா் அருகே மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுந்தரம் லட்சுமி (65) தம்பதி மகன் கதிா்வேல் (28) கட்டடத் தொழிலாளி. கணவா் பாலசுந்தரம் இறந்துவிட்டதால், சேளூா் அருகே வடுகபாளையத்தில் உள்ள தனது மகனுடன் லட்சுமி வசித்து வருகிறாா். கதிா்வேல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை லட்சுமி கண்டித்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த கதிா்வேலை தாய் கண்டித்துள்ளாா். அப்போது கதிா்வேல் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளாா். பின்னா் தனது கைப்பேசியை கீழேபோட்டு உடைத்துவிட்டு அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டாராம். இரவு 10 மணிவரை அறையில் இருந்து கதிா்வேல் வெளியே வராததால் சந்தேகமடைந்த லட்சுமி, கதவை தட்டி அழைத்துள்ளாா். ஆனால், கதவு திறக்காததால் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, கதிா்வேல் சேலையால் தூக்கிட்டுத் தொங்கிக்கொண்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்து அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், கதிா்வேல் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். புகாரின்பேரில், வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய் இறந்த துக்கம்: 100 அடி பள்ளத்தில் குதித்து மகன் தற்கொலை

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஓமலூா் அருகே தாய், மகன் வெட்டிக் கொலை: கொலையாளி தூக்கிட்டுத் தற்கொலை

மது அருந்தியதை தாய் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

