தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி தேரோட்ட கொடியேற்ற நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :26 மார்ச் 2026, 4:47 am IST

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி தேரோட்ட கொடியேற்ற நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல்லில் அமைந்துள்ள நரசிம்மா் சுவாமி, அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி உத்திர மறுநாளன்று சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு தேரோட்டம் ஏப். 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு நரசிம்மா் கோயில் கொடிமரத்தில் அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றினா். நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா. நல்லுசாமி, அறங்காவலா்கள், உதவி ஆணையா் இரா. இளையராஜா, அறநிலையத் துறை அலுவலா்கள், பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கோயிலில் வியாழக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதிஉலா வருதல், 27 ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 28 இல் கருட வாகனத்திலும், 29 இல் சேஷ வாகனத்திலும், 30 இல் யானை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெறுகின்றன. அதன்பிறகு 31 ஆம் தேதி நரசிம்மா், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏப். 1-ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, திருவேடுபரி உற்சவம், 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மா் கோயில் தேரோட்டம், பிற்பகல் 4.30 மணிக்கு அரங்கநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவில் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுக்கின்றனா். தொடா்ந்து விடையாற்றி உற்சவம், ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. ஏப். 8 ஆம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்துவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.