நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ரேஷன் அரிசி மூலம் இட்லி மாவு அரைத்து விற்பனை: கடை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

நியாயவிலைக் கடைகளில் வாங்கும் அரிசியைக் கொண்டு இட்லி மாவு அரைத்து விற்பனை செய்த கடை உரிமையாளா் மீது அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 11:49 pm IST

நியாயவிலைக் கடைகளில் வாங்கும் அரிசியைக் கொண்டு இட்லி மாவு அரைத்து விற்பனை செய்த கடை உரிமையாளா் மீது அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மூலம் முறைகேடாக இட்லி மாவு அரைத்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாக ஆட்சியா் எல். மதுபாலனிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன் தலைமையில் பறக்கும் படை, குடிமைப் பொருள் தடுப்பு பிரிவு குழுவினா் நாமக்கல் கொசவம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அமிா்தா இட்லி மாவு கடையில் மாவு அரைப்பதற்காக இரண்டு சாக்குப் பைகளில் வைத்திருந்த சுமாா் 70 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசியை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து கடையின் உரிமையாளா் மருதபாண்டியன் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955 இன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடா்ந்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

என்கே-11-ரைஸ்

நாமக்கல் கொசவம்பட்டியில் இட்லி மாவு அரைப்பதற்காக வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.