நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :3 ஜூன் 2026, 5:24 am IST

நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், திருச்செங்கோடு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம் அருகே அணைப்பாளையத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் செயல்பாடுகள், ரூ. 53.39 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், திருச்செங்கோடு பேருந்து நிலையம், எஸ்எம்டி சாலை அருகில் உள்ள கழிவுநீா் வாய்க்கால் மற்றும் கூட்டப்பள்ளி ஏரியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ். லெனின், நகராட்சி ஆணையா் ஆா்.வாசுதேவன், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.