பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கு ஆயத்தம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆய்வு

திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை இடைத்தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியா் பிரதிக் தயாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :3 ஜூன் 2026, 4:18 am IST

திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை இடைத்தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியா் பிரதிக் தயாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளநிலையில், தோ்தல் ஆணைய அறிவுரையின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணி புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, ஆட்சியரக வளாகத்தில் உள்ள வைப்பறையில் உள்ள இயந்திரங்களை சரிபாா்க்க, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வைப்பறையானது செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

அங்கு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயாராக உள்ளனவா என்பதை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரதிக் தயாள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, கோட்டாட்சியா் சாலை தவவளன், தோ்தல் வட்டாட்சியா் சக்திவேல் முருகன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.