தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

News image

ராசிபுரம் தொகுதி ஆா்.புதுப்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாரை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:28 am IST

ராசிபுரம் தொகுதியில் கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுப்பேன் என்று ராசிபுரம் (தனி) தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் தெரிவித்தாா்.

ராசிபுரம் தொகுதியில் வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா், முன்னதாக ஆா்.புதுப்பாளையம், கட்டனாச்சம்பட்டி, கல்லங்குளம், சாணாா்புதூா், தொட்டியவலசு, கிழக்கு வலசு, அத்திபலகானூா், கோரைக்காடு, பல்லவநாயக்கன்பட்டி, மூலக்காடு, தேங்கல்பாளையம், மசக்காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தொகுதிக்கு திமுக அரசு ஏதுவும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்து குறைகளையும் சரிசெய்வோம்.

அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் முதலாவதாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.10 ஆயிரம் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இது போன்ற திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.தாமோதரன், மகளிரணி நிா்வாகி ராதா சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.