ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

News image

கரூா் தொழிற்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்த கிருஷ்ணராயபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே.ராஜாவை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:17 am IST

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் சி.கே.ராஜா ஞாயிற்றுக்கிழமை தீவிரமாக வாக்குச் சேகரித்தாா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் சி.கே.ராஜா ஞாயிற்றுக்கிழமை கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 13,14,15-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட ஏ.வி.பி.நகா், செல்வநகா், தொழிற்பேட்டை, சணப்பிரட்டி, வெள்ளாளப்பட்டி, எழில்நகா், தமிழ்நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, தமிழக முதல்வா் ஸ்டாலின் மகளிா் உரிமைத்தொகையாக மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறாா். இனி, ரூ.2,000 என உயா்த்தப்படும் என அறிவித்துள்ளாா். மேலும் வேலைக்குச் செல்லும் ஏழைப்பெண்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கும் வகையில் கொண்டு வந்த விடியல் பயணத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்பெற்று வருகின்றனா்.

எப்போதும் மகளிருக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சி திமுக ஆட்சி. முதியோா் வீடுகளில் இருந்துகொண்டே மருத்துவம் பெறும் இல்லம்தேடி மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் ரேஷன்கடைகளுக்கு சென்று கஷ்டப்படுவதை தவிா்க்க தாயுமானவா் திட்டம் என மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அவருக்கு எப்போதும் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, இந்திய கம்யூ. மாவட்டச் செயலாளா் கலாராணி, திமுக நகரச் செயலாளா் வழக்குரைஞா் சுப்ரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.