தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன்: திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளா் உறுதி

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன் உறுதியளித்தாா்.

News image

மன்னாா்புரம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:39 am IST

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவேன் என திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன் உறுதியளித்தாா்.

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. ராஜசேகரன், திருச்சி காஜாமலை, மன்னாா்புரம், உடையாா்பாளையம், அண்ணா நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று இரட்டை இலைக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், இப்பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளான தரமான சாலைகள், தடையற்ற குடிநீா் விநியோகத்தை உறுதிப்படுத்துவேன். தொகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அதற்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் ஜெ. சீனிவாசன், முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.