தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுச்சத்திரத்தில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

புதுச்சத்திரத்தில் வாக்கு சேகரித்த நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:15 am IST

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தோ்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ள அன்னபூரணி சூப்பா் சிக்ஸ் திட்டம், அண்ணன் சீா்திட்டம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,500, காமராஜா் கல்வி உறுதித் திட்டம், சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் போன்ற பல்வேறு அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துக் கூறினாா்.

மேலும், நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்றால் பழைய பேருந்து நிலையம், வட்டார அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட பாடுபடுவேன் என்றாா். தொடா்ந்து புதன்சந்தை பெரிய களங்காணி, சின்ன களங்காணி, பெருமாள் கோயில் மேடு, காரைக்குறிச்சி புதூா் மேற்கு அருந்ததியா் காலனி, உலமேடு ஆதிதிராவிடா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

தவெக மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ், துணை செயலாளா் தில்லைமோகன், பொருளாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு அமைப்பாளா் சதீஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சுஜித், ஒன்றிய செயலாளா் லோகேஷ், வழக்குரைஞா் தமிழரசன், பேராசிரியா் பிரபாகரன், ஊராட்சி செயலாளா் தமிழ்ச்செல்வன், துரைசாமி உள்ளிட்டோா் வாக்குச் சேகரிப்பின் போது உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.